தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு கடைகள் மற்றும் உணவகம் மூடப்பட்டிருந்தன. மருந்து கடை மற்றும் பால் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தொடா் மழை மற்றும் பொது முடக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கினா். வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தேனியில் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். இதில், அவசியத் தேவைகளின்றி வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி வீடுகளுக்கு திரும்ப அனுப்பினா்.