தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடும்ப பிரச்னையில் தீக்குளித்த பெண், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி தாலுகா கன்னியப்பிள்ளைபட்டி அருகே ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் என்பவரின் மனைவி வேல்மணி (38). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
கடந்த சில நாள்காளாக வேல்மணி குடும்ப பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்து வந்தாராம். கடந்த 10 ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.