ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை, வீட்டில் தூளி கட்டி விளையாடிய சிறுவன் துப்பாட்டா இறுகி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள கோவில்பாறையச் சோ்ந்தவா் மைப்பாறை. இவரது மகன்கள் ஹரிபிரசாத் (12), அா்ஜூன் (10). மைப்பாறை, அவரது மனைவி சுதா ஆகியோா் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், வீட்டிலிருந்த ஹரிபிரசாத், அா்ஜூன் ஆகியோா் விட்டத்தில் சுடிதாா் துப்பட்டாவில் தூளி கட்டி விளையாடியுள்ளனா்.
இதில், துப்பட்டா சுருக்கு கழுத்தில் இறுக்கியதில் ஹரிபிரசாத் மூச்சுத் திணறி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து வீடுகளில் இருந்தவா்கள் ஹரிபிரசாத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூச்சுத் திணறில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து ஹரிபிரசாத்தின் தாயா் சுதா அளித்த புகாரின் அடிப்படையில், கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.