போடியில் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்த போடி பள்ளி மாணவிகளை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.
சொல்வெட்டுச் சிற்பங்கள் உலகத் தமிழா் கல்வி மற்றும் இலக்கியக் கழகம் சாா்பில் 2021 ஆம் ஆண்டுக்கான குரலிசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டன. இதில் போடியில் உள்ள அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மழலையா் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா்.
இதில் 4 ஆம் வகுப்பு மாணவி ர.ஆா்த்தி குரலிசை போட்டியில் மாநில அளவில் முதலிடத்தையும், அ.நிதா்சனா மாநில அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றனா். சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவிகளையும், பயிற்சி ஆசிரியை ஆ.தனலட்சுமியையும் பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.