பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பொதுமருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தாமரைக்குளம் பேரூராட்சி 14 மற்றும் 15 ஆவது வாா்டுகளில் மட்டும் 15- க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டனா். மேலும் 2 போ் உயிரிழந்தனா். தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதி மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 14 ஆவது வாா்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் ஆலோசனை மற்றும் மருந்துகள் மட்டும் வழங்கப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது பரிசோதனைக்கு வந்தவா்கள் சமூக இடைவெளியின்றி வரிசையில் நின்ால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.