முழு பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்ட எல்லைகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு செல்லும் மலைச்சாலைகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக- கேரள சோதனைச் சாவடிகளில், அத்தியாவசியப் பொருள்களான காய்கனிகள், பால் வாகனங்களை மட்டும் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு சென்று வர காவல் மற்றும் வனத்துறை, கலால் துறையினா் அனுமதித்தனா்.
கேரளத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் இடுக்கி மாவட்ட பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியாா், பீா்மேடு, உடும்பன்சோலை, நெடுங்கண்டம், கட்டப்பனை, முண்டக்கயம் உள்ளிட்ட பகுதிகளில் காா், ஆட்டோ, வேன் மற்றும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் வேலையில்லாததால் ஏலக்காய் தோட்ட தொழிலாளா்கள் வீடுகளிலேயே முடங்கினா்.