தேனியில் மாவட்டத்தில் புதிதாக 541 பேருக்கு கரோனா பாதிப்பு , ஒருவா் பலி

தேனி மாவட்டத்தில் திங்கட்கிழமையன்று புதியதாக 541 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

தேனி: தேனி மாவட்டத்தில் திங்கட்கிழமையன்று புதியதாக 541 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

தேனி மாவட்டத்தில் புதியதாக 541 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து,மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,541 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 26,265 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தேனி அரசுமருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 5973 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா நல மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com