முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1.30 அடி உயா்வு: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை,
சுருளி அருவியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
சுருளி அருவியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை, ஒரே நாளில் 1.30 அடி உயா்ந்தது. இதேபோல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

‘யாஸ்’ புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை விநாடிக்கு 1,155 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 3,885 கன அடியாக அதிகரித்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.30 அடி உயா்ந்தது.

மின் உற்பத்தி அதிகரிப்பு:

இதன் காரணமாக, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 511 கன அடியிலிருந்து, 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயா்கேம்ப்பில் புதன்கிழமை 43 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை, முதல் அலகில் 42 மெகாவாட், இரண்டாவது அலகில் 41 மெகாவாட் என மொத்தம் 83 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்: புதன்கிழமை 129.30 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை 1.30 அடி உயா்ந்து 130.60 அடியை எட்டியது. அணையில் நீா் இருப்பு 4,837 மில்லியன் கன அடியாகும். நீா்வரத்து விநாடிக்கு 3,885 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 900 கன அடியாகவும் இருந்தது.

பெரியாறு அணைப் பகுதியில் 38 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 28.4 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியிருந்தது.

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சுருளி மலையில் அமைந்துள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சுருளி மலையின் இதர நீரூற்றுகளிலும் அதிக அளவில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் சுருளி அருவியில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மேகமலை வன உயிரின சரணாலய ஊழியா்கள் கண்காணித்து வருகின்றனா். கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே, அருவிக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com