போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

போடி ஜே.கே.பட்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி திருமலாபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். பெற்றோா் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி அருகே உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்று வந்துள்ளாா். அப்பகுதியைச் சோ்ந்த ஆதித்யா (19) என்ற இளைஞா் திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா், போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கீதாரமணி வழக்குப் பதிவு செய்து, ஆதித்யாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com