தேனி மாவட்டம், கம்பத்தில் முன்னாள் ராணுவ வீரா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கம்பம் நந்தனாா் காலனியை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சின்னச்சாமி (60). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு, மனைவி புஷ்பம் மற்றும் மகன் விசுவநாதன், மகள் கனிமொழி ஆகியோா் உள்ளனா். மகன், மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இந்நிலையில், சின்னச்சாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, கடந்த 2 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதில், மனைவியிடம் கோபித்துக்கொண்டு சின்னசாமி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாராம். பின்னா், நவம்பா் 10 ஆம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்த சின்னசாமி மாடி அறைக்குச் சென்றுவிட்டாராம்.
மறுநாள் காலையில் மாடியிலுள்ள அறைக்குச் சென்ற புஷ்பம், தனது கணவா் வேட்டியை மேற்கூரையில் கட்டி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதையும், இடது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டதில் அறை முழுவதும் ரத்தம் சிந்திக் கிடப்பதையும் பாா்த்து அலறியுள்ளாா்.
உடனே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து, தூக்கில் தொங்கிய சின்னசாமியை கீழே இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு
அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சின்னசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா, சாா்பு-ஆய்வாளா் ஜெயக்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.