தேனி: வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ. 24) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வடபுதுப்பட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகா், சிட்கோ தொழிற்பேட்டை, அரப்படித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.