தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முகவா்கள் பங்கேற்கின்றனா். இதில், பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு சிலிண்டா் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியன குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.