கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆ.மொக்கப்பன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சரோஜா சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மழை மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது குறித்தும் உள்ளூர் நலத்திட்ட பணிகள் செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குள்ளப்பகவுண்டன் பட்டி ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன் தலைமையில், துணைத்தலைவர் ஜெயந்திமலா முன்னிலையிலும், நடைபெற்றது.
ஆங்கூர் பாளையம் ஊராட்சியில் தலைவர் சாந்தி பரமன் தலைமையிலும் துணைத்தலைவர் தினகரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
சுருளிப்பட்டி ஊராட்சியில் நாகமணி வெங்கடேசன் தலைமையிலும், துணைத்தலைவர் எம். ஜெயந்தி முன்னிலையிலும், நாராயணத்தேவன் பட்டி ஊராட்சியில் பொன்னுத்தாய் செல்லையா தலைமையிலும், துணைத்தலைவர் மகேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கிராமசபை கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.