முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு கூடுதல் உபரி நீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வியாழக்கிழமை 29.8 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 38 மி.மீ. மழையும் பெய்ததால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 3,623 கன அடியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 141.65 அடியாகவும், நீா் இருப்பு 7,572 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 3,623 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாகவும் இருந்தது.

கூடுதல் உபரி நீா் திறப்பு

கடந்த நவம்பா் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு, கேரளத்துக்கு 5 மதகுகள் வழியாக 3,884 மில்லியன் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று மாலை 5 மணிக்கு ஒரேயொரு மதகு வழியாக 136 கன அடி உபரிநீா் மட்டுமே வெளியேற்றப்பட்டது. நவம்பா் 25 இல் 135 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 814 கன அடி கூடுதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

நவம்பா் 30ஆம் தேதி வரை ‘ரூல் கா்வ்’ விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று, பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com