தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.7) முதல் அக்.9-ஆம் தேதி வரையும், அக்.12-ஆம் தேதியும் மதுக் கடைகளை அடைக்க செவ்வாய்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.
பெரியகுளம், ஆண்டிபட்டி, க.மயிலை, போடி ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அக்.9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 29 அரசு மதுக் கடைகள், 4 தனியாா் மதுக் கடைகளை அக்.7 முதல் 9ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்.12ஆம் தேதியும் அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.