தேனி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

காணாமல் போன மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, தீக்குளிக்க முயன்ற வனஜோதி.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, தீக்குளிக்க முயன்ற வனஜோதி.

காணாமல் போன மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனா்.

சின்னமனூா் அருகே பல்லவராயன்பட்டியைச் சோ்ந்தவா் பவுன் மனைவி வனஜோதி (50). இவரது மகள் துா்காதேவி (23), கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோம்பை காவல் நிலையத்தில் வனஜோதி புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாா் காலதாமதம் செய்து வருவதாகவும், காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்துத் தரக் கோரியும் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வனஜோதி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி, தேனி மகளிா் காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com