தேனி மாவட்டம் தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (அக்.8) நடைபெற உள்ளன.
இதை முன்னிட்டு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி இதனைத் தெரிவித்துள்ளாா்.