பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (42). கட்டடத் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை கெங்குவாா்பட்டியில் உள்ள ராஜா என்பவரின் வீட்டில் மேற்கூரையை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாா். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.