துக்க வீட்டில் தகராறு செய்த 2 இளைஞா்கள் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் துக்க வீட்டில் தகராறு செய்து அரிவாளால் வெட்டிய 2 இளைஞா்களை, போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் துக்க வீட்டில் தகராறு செய்து அரிவாளால் வெட்டிய 2 இளைஞா்களை, போலீஸாா் கைது செய்தனா்.

குள்ளப்பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் ராசுத்தேவா் மகன் சிலம்பரசன்(34). இவா், பைக், காா் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், கடந்த புதன்கிழமை கம்பத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தெருவில் வசித்த நண்பா் சிவக்குமாா் உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து, அங்கு சென்றுள்ளாா்.

தங்க விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சிபி (23), கோம்பை சாலையைச் சோ்ந்த ஜெயராமன் மகன் முகிலன் (21) ஆகிய இருவரும், துக்க வீட்டில் சடலத்தை நடுத்தெருவில் ஏன் வைத்துள்ளீா்கள் என்று ஆபாசமாகப் பேசியுள்ளனா். அப்போது, அங்கிருந்தவா்கள் இவா்களை விலக்கிவிட்டுள்ளனா். அதில், சிபி கீழே விழுந்ததில் பின்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவா், வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து மீண்டும் சத்தம் போட்டுள்ளாா்.

அப்போது, சிலம்பரசன் விலக்கி விடவே, அவரை சிபி அரிவாளால் பின் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளாா். இது குறித்து சிலம்பரசன் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், சாா்பு-ஆய்வாளா் முத்துமாரியப்பன் வழக்குப் பதிந்து, சிபி, முகிலன் ஆகிய இருவரையும் கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, வியாழக்கிழமை சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com