கம்பத்தில் நடைபயணம் சென்றவா் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் போலீசாா் வழக்கு

தேனி மாவட்டம் கம்பம் கூடலூா் நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதை தெற்கு போலீசாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் கூடலூா் நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதை தெற்கு போலீசாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் 33 ஆவது வாா்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தெருவில் வசிப்பவா் ராமசாமி மகன் மனோகரன் (58), தச்சுத்தொழிலாளியாக உள்ளாா். திங்கள்கிழமை மாலை கம்பம் கூடலூா் சாலையில் நடைபயிற்சி சென்றாா், அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மோட்டாா் பைக்கை ஓட்டி வந்தவா் மனோகரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த மனோகரனை அருகில் உள்ளவா்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா், அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மனோகரனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ஜெயபாண்டி செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டாா் பைக் ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com