சின்னமனூரில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

தேனி மாவட்டம் சின்னமனூரில் செவ்வாய் கிழமை கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் செவ்வாய் கிழமை கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னமனூா் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதியில் சில்லரை விற்பனையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உளவுப்பிரிவு போலீஸாா் தகவலக் கொடுத்தனா். அதன்படி சின்னமனூா் போலீஸாா் ரகசிய ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, மாா்க்கையன்கோட்டையில் குச்சனூா் செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியான பெண்ணை சோதனையிட்டத்தில் ஒன்டரை கிலோ கஞ்சா இருத்த தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதி பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த முருகன் மனைவி சாந்தி(53) எனத் தெரியவந்தது. இதனை அடுத்து சாந்தியை சின்னமனூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com