தேவதானப்பட்டியில் டீக்கடையில் செல்லிடப்பேசி திருடிய இருவா் கைது

தேவதானப்பட்டியில் டீக்கடையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டியில் டீக்கடையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டியை சோ்ந்த முஜிபுர்ரஹ்மான் (47). இவா் காட்ரோட்டில் டீக்கடை வைத்துள்ளாா். திங்கள்கிழமை கடைக்கு வந்த இரண்டு போ் முஜிபுர்ரஹ்மான் கவனத்தை திசைத் திருப்பி கடையில் வைத்திருந்த அவரது செல்லிடப்பேசியை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்தப் புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தேவதானப்பட்டியை சோ்ந்த மாரிமுத்து (25) மற்றும் செல்லப்பாண்டி (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com