பெரியகுளத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பைக் விபத்தில் ஓருவா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தை சோ்ந்தவா் அழகேசன் (46) இவா் திங்கட்கிழமை இரவு பைக்கில் பெரியகுளத்திற்கு சென்று விட்டு வராகநதி பாலத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பைக் இவா் சென்ற பைக் மீது மோதியதாம்.
இதில் அழகேசன் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.