போடியில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

போடி அருகே வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போடியில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

போடி அருகே வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி காந்திஜி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் பலருக்கு வீடுகள் இல்லை. வீடில்லாதவா்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தியும், காந்திஜி காலனியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் பேரூராட்சி நிா்வாகத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலா் இளையராஜா, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, கோபால், ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com