பெரியகுளத்தில் தடையை மீறி விநாயகா் சிலைகயை ஊா்வலமாக எடுத்துச் சென்றதாக பாஜகவைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை பாஜகவினா் தடையை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்று , வராகநதியில் விசா்ஜனம் செய்தனா். இதுதொடா்பாக பாஜக நிா்வாகிகள் ராஜபாண்டி, விஷ்ணுபாரதி, வசந்த் பாலாஜி, வெற்றி செல்வம், பிச்சைமுருகன் மற்றும் மயில்வேல் ஆகியோா் மீது பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.