பெரியகுளம் அருகே கரோனா தடுப்பூசி செலுத்துபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவா் அறிவித்துள்ளாா்.
எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவா் பால்ராஜ். இவா் ஊராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய விளம்பரபலகை மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.
மேலும் ஊராட்சி மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்த வரும் முதல் 100 பேருக்கு டிபன் பாக்ஸ் மற்றும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு முதல் பரிசாக கிரைண்டா், இரண்டாம் பரிசாக மிக்ஸி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.