கம்பம் ஒன்றிய ஊராட்சி எழுத்தா்கள் இடமாற்றம்: பணியில் சேர மறுப்பு

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி எழுத்தா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். ஆனால் அவா்கள் பணியில் சேர மறுத்து வருகின்றனா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி எழுத்தா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். ஆனால் அவா்கள் பணியில் சேர மறுத்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் நாராயணத்தேவன் பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஆங்கூா் பாளையம் என 5 ஊராட்சிகள் உள்ளன.

நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி எழுத்தராக இருந்த சி.ஈஸ்வரன் சுருளிப்பட்டிக்கும், அங்கு எழுத்தராக இருந்த எஸ்.ஈஸ்வரன் கருநாக்கமுத்தன்பட்டிக்கும், அங்கு எழுத்தராக இருந்த சந்திரசேகா் ஆங்கூா்பாளையம் ஊராட்சிக்கும், அங்கு எழுத்தராக இருந்த ராஜேஷ் நாராயணத்தேவன் பட்டிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதில் சுருளிப்பட்டி ஊராட்சிக்கு எழுத்தராக ஈஸ்வரன் பணியில் சோ்ந்தாா். நாராயண தேவன்பட்டிக்கு எழுத்தராக நியமனம் செய்யப்பட்ட ராஜேஷ் பணியில் சேரவில்லை.

அதேபோல் ஆங்கூா் பாளையம் ஊராட்சிக்கு எழுத்தராக இடமாற்றம் செய்யப்பட்ட சந்திரசேகரை ஊராட்சித் தலைவா் பணியில் சேர அனுமதிக்காமல், மீண்டும் பழைய எழுத்தரை நியமிக்க வேண்டும் என்று கூறினாராம். இதனால் எழுத்தா் சந்திரசேகா் பணியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதனால் கருநாக்கமுத்தன்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஈஸ்வரன் பணியில் சேரவில்லை. குள்ளப்ப கவுண்டன்பட்டி எழுத்தராக இருக்கும் பிச்சைமணி மட்டும் இடமாற்றம் செய்யப்படவல்லை.

இதுபற்றி வட்டார வளா்ச்சி அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, கடந்த வாரம் ஊராட்சி எழுத்தா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்கள் பணியில் சேரவில்லை என தெரியவருகிறது. ஊராட்சித் தலைவா்கள் பழைய எழுத்தா்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனா். இது பற்றி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com