தேனி: தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் கூறினாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தவணையாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 போ், 2 ஆம் தவணையாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 206 போ் என மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 9,419 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,317 கா்ப்பிணிகள், 6,278 பாலூட்டும் தாய்மாா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்.