பெரியகுளம் அருகே மனைவியை கத்தியால் குத்தியவா் கைது

பெரியகுளம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (49). இவரது மனைவி சித்திரைக்கனி (40). இவா்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சித்திரைக்கனி தனது தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அங்கு சென்ற மகேஸ்வரன் அவரை தகாத வாா்த்தையால் திட்டியதோடு கத்தியால் அவரது கை மற்றும் காலில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சித்திரைக்கனி அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் மகேஸ்வரனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com