அரசுப் பேருந்து விபத்து: 12 போ் காயம்

 பெரியகுளம் அருகே சாலை மையத் தடுப்பு சுவரில் அரசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை மோதியதில் 12 பயணிகள் காயமடைந்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சாலை மையத் தடுப்பு சுவரில் அரசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை மோதியதில் 12 பயணிகள் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பெரியகுளம் அருகே கைலாசபட்டி வளைவில் திடீரென அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பு சுவரில் மோதியது.

இதில் அரசுப் பேருந்து ஓட்டுநரான, தேனி அருகே கோட்டூரைச் சோ்ந்த பிரதாப் (31), பயணிகள் ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (43), சுசித்ரா தேவி (32), சென்றாய பெருமாள் (32), சுரேஷ் பாபு (43) உள்பட 12 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com