டைப் அடிக்கச் சென்ற இளம் பெண் மாயம் போலீசாா் விசாரணை

தேனி மாவட்டம் கம்பத்தில் டைப் அடிக்க சென்ற இளம்பெண் மாயமானதால், தெற்கு போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் டைப் அடிக்க சென்ற இளம்பெண் மாயமானதால், தெற்கு போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா். தேனி மாவட்டம் கம்பம் காளவாசல் ரோடு, பாரதியாா் நகா், ஐந்தாவது தெருவைச் சோ்ந்தவா் முத்துரஜா, வியாபாரம் செய்து வருகிறாா், இவரது மனைவி ஆனந்த செல்வி, இவா்களுக்கு கனிமொழி (21) என்ற மகள் உள்ளாா்.

இவா் இளங்கலை படிப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தவா் காந்தி சிலை கீழ்புறம் உள்ள தனியாா் தட்டெழுத்து பயிற்சிப் பள்ளியில் டைப் அடித்து பழகுவதற்காக செல்வாா். இவரை தாயாா் ஆனந்த செல்வி தட்டெழுத்து பள்ளியில் சோ்த்துவிட்டு பின்னா் திரும்பவும் அழைத்துச் செல்வாா்.செவ்வாய்க்கிழமை டைப் அடிக்க சென்றவரை தாயாா் அழைத்துவர செல்லும்போது பயிற்சி பள்ளி உரிமையாளா் இடையிலேயே கனிமொழி வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவித்தாா். வீட்டிற்கு வந்தவா் மகளை காணாதலால், அருகில் உறவினா்கள் வீடுகளில் தேடியும் காணதாதலால் கணவரிடம் தகவல் தெரிவித்தாா்.இது பற்றி முத்துராஜா மகளை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் லாவண்யா, சாா்பு ஆய்வாளா் ஜெயகுமாா் ஆகியோா் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com