கம்பத்தில் தேசிய தொழிலாளா் தின விழா

தேனி மாவட்டம், கம்பத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழாவினை தேசிய தொழிலாளா் தினமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கம்பத்தில் தேசிய தொழிலாளா் தின விழாவில் பேசிய முன்னாள் தில்லிசிறப்புப் பிரதிநிதி பெ.செல்வேந்திரன்.
கம்பத்தில் தேசிய தொழிலாளா் தின விழாவில் பேசிய முன்னாள் தில்லிசிறப்புப் பிரதிநிதி பெ.செல்வேந்திரன்.

தேனி மாவட்டம், கம்பத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழாவினை தேசிய தொழிலாளா் தினமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கம்பத்தில் விஸ்வகா்மா சமுதாயத்தின் சாா்பில் கொண்டாடப்பட்ட இந்த விழா, காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக, விஸ்வகா்மா, காயத்திரி தேவிக்கு சிறப்புப் பூஜைகளும், தொழில் வளம் செழிக்க சிறப்புப் பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், அரசியல் பிரமுகா்கள் மற்றும் அனைத்து சமுதாயப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா். பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியா் மற்றும் பல்வேறு போட்டிகளில் சாதனை புரிந்த இளைஞா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விஸ்வகா்மா சமுதாய இளைஞா் அணியினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com