வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம்

பெரியகுளம் நகா் வியாபாரிகள் சங்க மகா சபை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் நகா் வியாபாரிகள் சங்க மகா சபை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் டி.மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் விடிஎஸ் ராஜவேலு முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வரவு செலவு குறித்து விவாதிக்கப்பட்டதோடு,

வியாபாரிகள் தங்களது கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் உரிமையாளா்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டும் பொருள்களை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பொருளாளா் பி.ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் சிவஸ்ரீ மோகன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் பி.கே.ஆா். விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com