கம்பம் காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா பால்குட ஊர்வலம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
கம்பம் ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம் வந்தனர்.
கம்பம் ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம் வந்தனர்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுத்திரன் ராகுல் அகமுடையார் சமுதாயத்திற்கு சொந்தமான ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பெண்கள் கொண்டுவந்த பால்குடம் கோவில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கம்பம் வடக்கு வட்டம் ராஜகுல அகமுடையார் சங்க நிர்வாகிகள், இளைஞர் அணியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com