தேனி: தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் சனிக்கிழமை 340 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அந்த உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.