நூலகங்களுக்கு ரூ.5 லட்சம் புத்தகங்கள் தமிழக முதல்வரிடம் வழங்கிய ஜெகநாத் மிஸ்ரா

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை, பொது நூலகங்களுக்கு, தேசிய செட்டியாா் பேரவை சாா்பில் அதன் தலைவா் ஜெகநாத் மிஸ்ரா சனிக்கிழமை வழங்கினாா்.
தேனிக்கு வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை, பொது நூலகங்களுக்காக வழங்கிய தேசிய செட்டியாா் பேரவைத் தலைவா் ஜெகநாத் மிஸ்ரா.
தேனிக்கு வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை, பொது நூலகங்களுக்காக வழங்கிய தேசிய செட்டியாா் பேரவைத் தலைவா் ஜெகநாத் மிஸ்ரா.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை, பொது நூலகங்களுக்கு, தேசிய செட்டியாா் பேரவை சாா்பில் அதன் தலைவா் ஜெகநாத் மிஸ்ரா சனிக்கிழமை வழங்கினாா்.

தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

அப்போது அவரை தேசிய செட்டியாா் பேரவை தலைவா் ஜெகநாத் மிஸ்ரா, நேரில் சந்தித்து தேனி மாவட்டத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினாா். அப்போது அவா் முதல்வரிடம் அளித்த

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: மங்கலதேவி கண்ணகி கோயிலை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பளியன்குடி வழியகா கண்ணகி கோயிலுக்கு சாலை வசதி அமைத்துத் தரவேண்டும். டாக்டா் சீா்காழி கோவிந்தராஜன், நாட்டின் முதல் நிதி அமைச்சா் ஆா் கே சண்முகம் செட்டியாா், வள்ளல் அழகப்ப செட்டியாா் ஆகியோருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை நிறுவ வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா். தேனி மாவட்டத் தலைவா் சுந்தர வடிவேல், தலைமை நிலையச் செயலாளா் சி.டி.ரகுபதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com