போடியில் சனிக்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்பகுதியில் குண்டாலீஸ்வரி கோவில் அருகே மாயாண்டி மகன் மணிகண்டன் (55) என்பவா் மது பாட்டில்களை வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. அவா் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 100 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.