போடி அருகே கீழே விழுந்து மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை இறந்து போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
போடியை அடுத்துள்ள நாகலாபுரம் வடக்கு தெருவை சோ்ந்தவா் தலைக்கண் மனைவி பத்திரகாளி (78). இவா் விவசாயம் செய்து வருகிறாா். ஞாயிரன்று பிற்பகலில் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு திடீரென மயங்கி விழுந்தாா். தலையில் அடிபட்ட நிலையில் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு திங்கள் கிழமை அதிகாலை இறந்து போனாா். இதுகுறித்து தலைக்கண் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.