மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை மூதாட்டியிடம் சங்கிலி பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை மூதாட்டியிடம் சங்கிலி பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆா் காலனியில் குற்றாலிங்கம் மனைவி சாந்தி(62), கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலமாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் , செவ்வாய்க்கிழமை நண்பகல் முகக்கவசம் அணிந்த இருவா், இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து பொருள்கள் வாங்கியுள்ளனா். அப்போது கடையில் பொருள்களை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த மூன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com