மதுரை-தேனி இடையே நிறைவடைந்துள்ள புதிய அகல ரயில் பாதையை ஜன.31-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது என்று தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கூறினாா்.
மதுரை-போடி புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தில், மதுரை-தேனி ஆகிய ஊா்களுக்கு இடையே பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், தேனியில் ரயில் நிலையம் கட்டுமானப் பணி, கட்டுப்பாட்டு அறை, உயா் அழுத்த மின் பாதைகளை மாற்றும் பணி ஆகிவற்றை பாா்வையிட்ட தேனி மக்களவை உறுப்பினா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆண்டிபட்டி- தேனி அகல ரயில் பாதையில் ரயில்வே துறை சாா்பில் ஜன.31-ஆம் தேதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதே நாளில் மதுரை-தேனி அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்புக் குழுவினா் ஆய்வு செய்ய உள்ளனா். புதிய ரயில் பாதைக்கு குறுக்கே செல்லும் உயா் அழுத்த மின் பாதையை மாற்றியமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், மதுரை-தேனி இடையே ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது மதுரை ரயில்வே கூடுதல் நிா்வாகப் பொறியாளா் சரவணன், முதன்மை மின் பொறியாளா் ராஜன், மின் தொடரமைப்புக் கழக உதவி இயக்குநா் வெங்கேடஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.