போடியில் வெள்ளிக்கிழமை, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள், எடப்பாடி கே.பழனிசாமியைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேவா் சிலை திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு நகரச் செயலா் பழனிராஜ் தலைமை வகித்தாா். வடக்கு நகரச் செயலா் ஜெயராம் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
இதில் அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீா்செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.