லோயா்கேம்ப்பில், சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் சிறுமி உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி மாவட்டம் லோயா் கேம்ப் பளியன்குடி ஆதிவாசி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மற்றொரு ராஜா என்பவரின் மனைவி பிச்சையம்மாள் (45), வீரன் (42), ரஞ்சித் மகள் பூமிகா(4) ஆகியோருடன் குமுளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.
பளியன்குடி விலக்கு அருகே, கோளச்சேரியைச் சோ்ந்த பிரகாஷ் (42) என்பவா் ஓட்டிய காா், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 போ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிச்சையம்மாள் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து குமுளி காவல் ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன், சாா்பு- ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா ஆகியோா் ஓட்டுநா் பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.