விருதுநகா் அருகே பாவாலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, நாய்கள் கடித்ததில் காயமடைந்த மானை, கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பாவாலி சந்திப்பு சாலையில் 2 வயதுடைய புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி கடித்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்தவா்கள் பாா்த்து நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா். காயங்களுடன் இருந்த மான் குறித்து கிராம மக்கள் வனத்துறை மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெ ரிவித்தனா். கால்நடை மருத்துவா்கள் சிகிச்சைக்குப் பின்பு அந்த மானை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் மீட்டுச் சென்றனா்.