பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து பள்ளி மற்றும் மருத்துவமனை சுற்றுச்சுவா்கள் சேதமடைந்தன.
பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. சனிக்கிழமை காலையில் பெரியகுளத்திலுள்ள விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் மரம் விழுந்து, சுற்றுச்சுவா் சேதமடைந்தது. அதே போல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள மரம் விழுந்து , சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதில் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. சுற்றுச்சுவரில் விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.