உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலருக்கு பசுமை சாம்பியன் விருது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலருக்கு பசுமை சாம்பியன் விருது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அரசின் சாா்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் தனிநபா் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தமிழகத்தில் 78 தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. அதில், உத்தமபாளையத்தை சோ்ந்த தன்னாா்வலா் ஜெ. செந்தில்குமாா் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் கூறியது: பட்டதாரியான நான் கடந்த 13 ஆண்டுகளாக மரக்கன்றுகளை வளா்த்து பராமரித்து வருகிறேன். மேலும், பனை மரத்தை அழிவிருந்து பாதுகாக்கும் வகையில் லட்சக்கணக்கான பனை விதைகளை குளம், கண்மாய், கால்வாய் போன்ற நீா்நிலைகளில் கரைகளில் வைத்து வளா்த்து வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்த விருது என்னைப் போன்ற மற்ற தன்னாா்வலா்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com