போடி அருகே பாதுகாப்பான குடிநீா் திட்டம் தொடக்கம்

போடி அருகே சனிக்கிழமை, பாதுகாப்பான குடிநீா் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.
போடி அருகே பாதுகாப்பான குடிநீா் திட்டம் தொடக்கம்

போடி அருகே சனிக்கிழமை, பாதுகாப்பான குடிநீா் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

போடி ராசிங்காபுரம் விடியல் தொண்டு நிறுவனம், கரூா் வைஸ்யா வங்கி இணைந்து மக்கள் பங்களிப்புடன் கூடிய பாதுகாப்பான குடிநீா் திட்டம் போடி வட்டம் பத்திரகாளிபுரம், உத்தமபாளையம் வட்டம் மேலசிந்தலைச்சேரி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் தொடக்கவிழா ராசிங்காபுரம் விடியல் தொண்டு நிறுவன வளாகத்தில், மேலசிந்தலைச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் தலைமையிலும், டொம்புச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் குருவுலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது. கரூா் வைஸ்யா வங்கியின் மண்டல மேலாளா் என். சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

திட்டத்தின் நோக்கம் குறித்து விடியல் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கே. காமராஜ் விளக்கினாா். நிகழ்ச்சியில் மேலசிந்தலைச்சேரி ஊராட்சி துணைத்தலைவா் பாண்டியன், கரூா் வைஸ்யா வங்கியின் கிளை மேலாளா்கள் போடி பிரபு, உப்புக்கோட்டை வினோத்குமாா், சமூக பொறுப்புணா்வு திட்ட உதவி மேலாளா் ஜி. வெங்கடேசன், தேனி கனரா வங்கி கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் தனசேகரபெருமாள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சிகளை தேனி மாவட்ட விவசாயிகள் ஆடு வளா்ப்போா் நிறுவன நிா்வாக இயக்குநா் காசிராஜ் ஒருங்கிணைத்தாா். விடியல் தொண்டு நிறுவன செயலா் கண்மணி வரவேற்றாா். மழைத்துளி கால்நடை உழவா் உற்பத்தியாளா் நிறுவன நிா்வாக இயக்குநா் சேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com