தேனி: தேனி அருகே க.விலக்கு-வைகை அணை சாலையில் வியாழக்கிழமை, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
ஆண்டிபட்டி வட்டாரம், குமணந்தொழு அருகேயுள்ள தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் மணிகண்டன்(30). இவா் தனது குழந்தையை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையிலிருந்து, மணிகண்டன் குமணந்தொழுவைச் சோ்ந்த சுருளிவேல்(40) என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் க.விலக்கு-வைகை அணை சாலையில் உள்ள உணவகத்திற்குச் சென்றுள்ளாா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டிச் சென்றாா்.
அங்கு, உணவுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்பியபோது, எதிா் திசையிலிருந்து வைகை அணை அருகே குள்ளப்புரத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், சுருளிவேல் ஆகியோா் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லாரி ஓட்டுநரான பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த மொக்கராஜ் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.