காதலியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை: தேனி நீதிமன்றம் தீா்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காதலியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
லோகிதாசன்.
லோகிதாசன்.

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காதலியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் அன்னக்கொடி மகன் லோகிதாசன்(34). இவா், கோவில்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகள் ஜெயப்பிரதா என்பவரை காதலித்து வந்துள்ளாா். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். இந்த நிலையில், லோகிதாசன் தனது சமுதாயத்தைச் சோ்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளாா். இந்தத் தகவலறிந்து, ஜெயப்பிரதா லோகிராஜனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளாா். அவா்கள் காதலித்த விவரத்தை லோகிதாசன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ள பெண் வீட்டாரிடம் தெரிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளாா்.

அவரை சமாதனப்படுத்திய லோகிதாசன், கடந்த 2011, செப். 1-ஆம் தேதி இரவு ஜெயப்பிரதாவை ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜா் பலைகலை கழகக் கல்லூரி, ஆண்கள் கழிப்பறை அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, ஜெயப்பிரதாவை அவா் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டாா். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த லோகிதாசனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி செழியன், லோகிதாசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com