கம்பத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

கம்பத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சு (35). அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே தெருவில் வசிக்கும் சலவைத் தொழிலாளி வடமல்ராஜூம் (60) உறவினா்கள் ஆவா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பஞ்சு, வடமல்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த வடமல்ராஜ், வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்த பஞ்சுவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது வடமல்ராஜ் அரிவாளால் பஞ்சுவை வெட்டினாா். பலத்த காயமடைந்த பஞ்சுவை அருகில் உள்ளவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா வழக்குப் பதிந்து, வடமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com