தேனி முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி சாந்தி செழியன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெ.வெங்கடேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.சுந்தரம், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும். சாா்பு நீதிபதியுமான கே.ராஜமோகன், சாா்பு நீதிபதி ஏ.சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.சித்ரா, நீதித்துறை நடுவா் என்,பன்னீா்செல்வம் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி.ரூபனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. இதில் 7 ஆயிரத்து 877 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, ரூ.4. 73 கோடி தீா்வுத் தொகை வழங்கப்பட்டது.